சவால்களுக்கு ஈடுகொடுத்து, கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் எதிர்காலச் சந்ததியை கட்டியெழுப்பும் கல்வி முறைமை நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான பிரஜைகளை உருவாக்குவதற்கு வெஸ்லி கல்லூரி முன்னோடிச் சேவையாற்றியுள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நன்றியும் கூறினார். கொழும்பு … Read more

இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்தார்

இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ அண்மையில் (06) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இலங்கை – தென்கொரிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயாசிறி ஜயசேகர, பிரதித் தலைவர் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார் மற்றும் பொருளாளர் கௌரவ ஜே.சி.அலவத்துவல ஆகியோரும் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் … Read more

காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட மாட்டாது…

காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்றைய தினம் (13) உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களுக்கான பொது இணையப் பக்கத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக மருந்துகளை கொள்வனவு செய்வதில் விசேட கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்த … Read more

இலங்கை கோள்மண்டலம் இன்று (13) முதல் மீளத் திறப்பு

இலங்கை கோள்மண்டலம் உலகளாவிய புரொஜெக்டர் பராமரிப்பு திருத்தப்பணிகளின் பின்னர் மக்கள் பார்வையிடுவதற்காக  இன்று(13) முதல் மீள திறக்கப்படவுள்ளது. அதற்கிணங்க, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு பாடசாலை மாணவர்கள் கோள்மண்டலத்தை பார்வையிட வாய்ப்பளிக்கப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பொதுமக்களும் பார்வையிடலாம். இதேவேளை திருத்தப்பணிகளுக்காக கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களுக்கு http://www.planetarium.gov.lk/home/ என்ற இணையத்தளத்தைப்  பார்வையிடலாம். 

உடலியல் சார் நோய் தினத்தை முன்னிட்டு மக்களுக்கான பொது இணையப் பக்கம்..

இலங்கை உடலியல் மருத்துவ நிறுவகத்தின் விசேட வேலைத்திட்டமாக இன்று அதாவது மார்ச் 13 ஆம் திகதி உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில், மக்களுனக்கான பொது இணையப் பக்கம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த இணையத்தளத்தின் ஊடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மக்கள் தங்களின் சகல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் பதில்களைக் கண்டறிய … Read more

2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்..

நாடளாவிய ரீதியில் 2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான நேர்முகப்பரீட்சை, நாராஹேன்பிட்டியவில் அமந்துள்ள ‘நிலமெதுர’ வளாகத்தில் இன்று (13), நாளை (14) மற்றும் நாளை மறுநாள் (15) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் எவரேனுக்கும் இதுவரையிலும் அழைப்புக்கடிதம் கிடைக்காவிடின், நேர்முகப்பரீட்சை இடம்பெறும் திகதி மற்றும் நேரம் என்பவற்றை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.moha.gov.lk ஊடாக அறிந்து கொள்ள … Read more

NSBM நிறுவனத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

அரசிற்கு சொந்தமானதும் முழுமையான சுய இலாபமீட்டும் நிறுவனமான வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினால் (NSBM ) கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலின் கீழ் மருத்துவ பீடத்தை நிறுவுதல் மற்றும் அதன் ஊடாக MBBS எனும் வைத்தியப் பட்டத்தை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டது. அப்பட்டப்படிப்பிற்காக வருடாந்தம் 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இம்மருத்துவ பீட மாணவர்களுக்காக மருத்துவப் பயிற்சி வழங்குவதற்குப் … Read more

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (12) கையளித்தார். இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார். எல்.இளங்கோவன் வடக்கு மாகாண … Read more

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள அங்கீகாரம்

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32% வரை அதிகரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய வன எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வனஜீவராசிகள், வன வளங்கள் … Read more

நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கான நெருக்கடிகளைக் குறைப்பதாயின் கிராமிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்க வேண்டும்

நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கான நெருக்கடிகளைக் குறைப்பதாயின் கிராமிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்கி, அவற்றை உறுதியாக வலுப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், ஆதார, தள, என சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தெரிவித்தார். வடமத்திய மாகாணத்தின், அநுராதபுர மாவட்டத்தில், அநுராதபுர போதனா வைத்தியசாலை, கெபிதிகொல்லேவ, மதவாச்சி மற்றும் பதவிய ஆதார வைத்தியசாலைகள், ஏதாகட ஆரம்ப மருத்துவ உதவிப் பிரிவு ஆகியவற்றில் காணப்படும் ஆளணி … Read more