கோள்மண்டலம் இன்று முதல் மார்ச் 12ம் திகதி வரை மூடப்படும்

இன்று (27) முதல் மார்ச் 12 ஆம் திகதி வரை இலங்கை கோள்மண்டலத்தை, பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் கோள்மண்டலத்தின், ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (27.02.2024) முதல் 12.03.2024 வரை பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சாரக் கட்டணத்தை ஆகக்குறைந்தது 20% ஆவது குறைக்க வேண்டும்

தற்போதைய மின்சாரக் கட்டணத்தை ஆகக்குறைந்தது 20% ஆவது குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை ? துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப்பெறும் போது உரிய மின்சாரக் கட்டண நிலுவையைத் தவணை அடிப்படையில் செலுத்துவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்கவும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவக்கு அறிவுறுத்தல் ? வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அரசாங்கத் துறையின் மின்சாரப் பாவனை தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளவும் பரிந்துரை ? … Read more

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (26) பிற்பகல் தேசபந்து தென்னகோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

• மேற்கு மற்றும் கிழக்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தெரிவிப்பு. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்திப் பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான … Read more

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வருடத்திற்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்”

• 3600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த … Read more

நீதி அமைச்சரினால் மாவட்ட மட்ட ஆலோசகர் சபைக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!!

நீதி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் “சகவாழ்வு சங்கங்களை நிறுவி வருகின்றது. அதன்  அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கான மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைக்கும் நிகழ்வும், அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் (24) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் … Read more

மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சனை தொடர்பில் நீதியமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்!!

மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சனைகள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ  தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று (24) மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் போரில் இரண்டு நாள் விஜத்தினை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நீதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கள விஜங்களை மேற்கொண்டு மாவட்டத்தின் நிலமை தொடர்பாக அறிந்து கொண்டது மட்டுமல்லாமல், பல தரப்பட்ட துறைசார் அதிகாரிகள், … Read more

கங்காராம விகாரையின் நவம் மகா பெரஹரா ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹராவை நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பான பெரஹரா விழாவாக மாற்ற பக்தர்களின் ஒற்றுமை உதவியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெராவை (23) ஆரம்பித்துவைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கொழும்பு நவம் பெரஹெரா நாற்பத்தைந்தாவது தடவையாகவும் நேற்று (23) இரவு வீதி உலா நடைபெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மங்கள ஹஸ்திராஜயா யானை … Read more

நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், குறித்த முன்மொழிவை ஜனாதிபதியிடம் கையளித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை … Read more

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள், கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தல்

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள் மற்றும் சன்னஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை … Read more