உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்வு நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் ,இவற்றின் மாதிரிகள் பேராதனை கால்நடை வைத்திய ஆராய்வு நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.