நடிகர் சரத்குமார் குடும்பத்தில் புகுந்த கொரோனா !!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். சிம்புவுடன் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மாரி 2, சண்டக்கோழி 2, சர்தார் போன்ற படங்களில் … Read more

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

டெல்லி:இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடபெற்று வருகிறது. தமிழ் மொழியில் 31,803 பேர் உள்பட தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் – தமிழக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழக தலைமைச் செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கு ஓட்டுசீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை … Read more

பெரும் கலவரம்.. வெளி மாவட்டங்களின் போலீசார் கள்ளக்குறிச்சியில் குவிப்பு !

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் … Read more

மீண்டும் சாம்பியன்.. இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அசத்தல் !

செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக், சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் ஆகியோரை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.   பின்னர், இறுதியில் ரஷ்ய வீரர் அலெக்ஸ்சாண்டர் பிரெட்கேயை விட அதிக புள்ளிகளை பெற்று இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று மீண்டும் அசத்தியுள்ளார். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் 7 வெற்றி, 2-டிரா … Read more

பலாத்காரத்தால் 6 மாத கர்ப்பம் சிறுமிக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க அனுமதி: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்யப்பட்டதால் 6 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த  15 வயது சிறுமி, உறவினர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னரே சிறுமி கர்ப்பிணியானது பெற்றோருக்கு தெரிய வந்தது. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் … Read more

பொம்மை ஏரோ ப்ளைனுடன் குருத்வாராவில் குவியும் பக்தர்கள்.. என்னதான் காரணம்?

வழிபாட்டு தலங்களுக்கு சென்று வந்தால் தங்கள் குறைகள் நிறைகளாக மாறும் என்று நம்பும் மக்கள் வட்டாரம் ஏராளம். நிறைவேறாமல் போனாலும், விநோதமான கோரிக்கைகளை முன்வைக்கும் வழக்கத்தையும் கைவிடாமல் இருப்பார்கள். இப்படி இருக்கையில், வேலை அல்லது படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் கடைசி நேரம் வரை காத்திருந்தாலும் அனுமதி கிடைக்காமல் போகும். இதன் காரணமாக வெளிநாட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்து போவார்கள். அப்படியான நிகழ்வுகளை தவிர்ப்பதற்காகவே சில வழிபாட்டு தலங்கள் இந்தியாவில் இருக்கின்றன. கேட்கும் போதே … Read more

கருப்பு கொடி, பலூன் பறக்கவிட்ட கிராம மக்கள் !!

புதுச்சேரியில் ஆளுநர் வருகையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி அருகே துத்திப்பட்டு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் கட்டியுள்ளதாக பிரச்சினை எழுந்தது. மைதானத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களால் விவசாய நிலங்களுக்கு கூட செல்ல முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் … Read more

மீண்டும் மிரட்ட வரும் சூர்யா.. ’24’ படத்தின் இரண்டாம் பாகம் !!

சூர்யாவின் ’24’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ’24’. கடந்த 2016ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் மூன்று வேடங்களில் சூர்யா அசத்தியிருந்தார். படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படம் குழந்தைகள் … Read more

ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்திய விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் இந்திய விமானம் ஒன்று கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்படுவது இது 2வது முறையாகும். இது குறித்து இண்டியோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் IndiGo 6E-1406 விமானம் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கராச்சியிலிருந்து பயணிகளை அழைத்துவர … Read more