“ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்ல, ஊழலை மறைக்கவே பேரணி” – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் மெகா பேரணியை கடுமையாக சாடியுள்ள பாஜக, “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி இல்லை. குடும்பத்தை காப்பாற்றவும், ஊழலை மறைக்கவும் நடக்கும் பேரணி” என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ், திமுக, மற்றும் ஆர்ஜேடி உள்ளிட்டக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி ராம் லீலா மைதானத்தில் முன்பு அன்னா ஹசரே தலைமையில் … Read more

“சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைக்க முடியாது” – கேஜ்ரிவால் மனைவி @ டெல்லி பேரணி

புதுடெல்லி: கேஜ்ரிவால் ஒரு சிங்கம். சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது என டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் பேசியுள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பேசிய கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், “பிரதமர் மோடி எனது கணவரை சிறையில் … Read more

வயநாடு பாஜக வேட்பாளருக்கு எதிராக 242 வழக்குகள்

கேரள பாஜக தலைவரான சுரேந்திரன், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை எதிர்த்து தே.ஜ.கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தன் மீதுள்ள வழக்குகள் விவரம் குறித்து, கட்சி இதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அது 3 பக்க அளவுக்கு நீண்டு இருக்கிறது. அவர் மீது மொத்தம் 242 வழக்குகள் உள்ளன. இதில் 237 வழக்குகள் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சபரிமலை போராட்டம் தொடர்புடையவை. சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற … Read more

பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு! அதிர்ச்சி காரணம்..

Punjab Girl Dies After Eating Birthday Cake News In Tamil : பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுமி, பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி அமைச்சரிடம் அமலாக்க துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் உள்ளார். இந்த ஊழலில் லஞ்சமாக கிடைத்த ரூ.100 கோடி பணத்தை் கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி செலவழித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி அமைச்சர்கள், பஞ்சாப் மற்றும் கோவாவில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டிடம் அமலாக்கத்துறை … Read more

இவிஎம்மில் முறைகேடு செய்ய ஊரடங்கு உத்தரவு என வதந்தி பரப்பியவர் கைது

திருவனந்தபுரம்: கேரள சைபர் பிரிவு போலீஸ் கூறியதாவது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.வி.ஷரபுதின். இவர் கரோனா பெருந்தொற்று காலத்தின்போது ஊரடங்கு உத்தரவு குறித்து வெளியான பழைய செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறை கேடு நடத்தும் திட்டத்துடன் அடுத்த 3 வாரங்களுக்கு கேரளாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வதந்தி பரப்பி உள்ளார். காவல் துறையின் கீழ் கொச்சி சைபர் … Read more

6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரமர் மோடி! உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

Prime Minister Modi, central intelligence report: பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்காக எங்கும் செல்லாதது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு பின்னணியில் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் தான் காரணம் என்கிறது அரசியல் வட்டாரம்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு நியமனம்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று அந்த கட்சியின் சார்பில் நாடு முழுவதும் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பாஜக அலுவலகங்களில் ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டன. இவற்றின் மூலம் மக்களின் கருத்துகள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. பாஜக அறிவித்த செல்போன் எண், நமோ செயலி, சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன. 27 … Read more

ஜூன் 1-ம் தேதி வரை தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படஉள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இறுதிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களை சேர்ந்த 57 மக்களவைத் … Read more

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் இன்று போராட்டம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கோபால் ராய் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகத்தை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்துகிறது. இது எந்த தனி நபருக்கு ஆதரவான போராட்டம் … Read more