அரசு நிர்வாகம் சுறுசுறுப்பு; அரசியல் கட்சிகள் சுணக்கம்: களைகட்டாத நெல்லை தேர்தல் களம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் தேர்தல் பணிகளில் அரசுத்துறை நிர்வாகங்கள் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினரினடையே சுணக்கம் காணப்படுகிறது. இதனால் தேர்தல் களம் களைகட்டவில்லை. திருநெல்வேலியில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கா.ப. கார்த்திகேயன் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழுவினர் முடுக்கிவிட்டுள்ளனர். 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளுக்கு வரமுடியாத நிலையிலுள்ள மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று … Read more