லாரிடிரைவர்கள் போராட்டம் நீடிப்பு – கனடாவில் அவசரநிலை பிரகடனம்

கனடா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில்  அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலைகளில் … Read more

ஹிந்து கோவில்கள் சூறையாடல்; கனடாவில் நீடிக்கும் பதற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரோன்டா : கனடாவில், ஹிந்து கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன. கடந்த 30ம் தேதி மிசிசவுகா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து … Read more

Canada Protest: கனடாவில் வலுக்கும் போராட்டம்; ஒடாவாவில் அவசர நிலை பிரகடனம்

கனடாவில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் நூற்றுக்கணக்கானவர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Tredeau) மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டின் தலைநகரில் உள்ள தங்கள் … Read more

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பயங்கரவாதிகள் சரண் <!– ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பய… –>

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பயங்கரவாதிகள் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்களுக்கு கூடுதல் தலைவலியாக உள்ளூர் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரும் இருந்தனர். இந்நிலையில் நங்கர்கர் மாகாண அரசிடம் 50 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் பழங்குடியின மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 50 பேர் சரணடைந்ததாகவும், பொது மன்னிப்பு அடிப்படையில் தாலிபான்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.   Source link

போதைப்பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போதை பொருள் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்து. மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன்(41), தமிழரான இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்து கொண்டு சென்று, சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் அளித்தார். இதுபற்றிய தகவல் சிங்கப்பூர் போலீசாருக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த பையை … Read more

பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை: சீன பிரதமர் வாக்குறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : “சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்,” என, பாக்., பிரதமரிடம், சீன பிரதமர் லி கெக்கியாங் கூறினார். நம் அண்டை நாடான சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. துவக்க விழாவில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன தலைநகர் பீஜிங்கிற்கு வந்தார். இதற்கிடையே சீன தலைவர்களையும், அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் சீன பிரதமரான லி கெக்கியாங்கை, நேற்று … Read more

இலங்கையில் தமிழக மீனவர்கள் படகுகள் ஏலம்.! <!– இலங்கையில் தமிழக மீனவர்கள் படகுகள் ஏலம்.! –>

இலங்கையில் தமிழக மீன்பிடி படகுகள் ஏலம் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி ஏலம் இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் இன்று காலை 9 மணி முதல் ஏலம் விடப்படுகிறது இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் … Read more

பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பெரு நாட்டின் பிரதமர் ராஜினாமா

பியூனோஸ் அயர்ஸ் : தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மொரோக்கோ சிறுவன் மரணம்| Dinamalar

இக்ரேன் : மொரோக்கோவில் கடந்த 1ம் தேதியன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் இக்ரேன் என்ற இடத்தில், ரயான் ஓராம் என்ற, 5 வயது சிறுவன் கடந்த 1ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.கிணற்றின் 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 100 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின், … Read more

WInter Olympics: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் தரம் குறைந்த உணவு? பகீர் புகார்

பெய்ஜிங்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் உணவு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘எனது எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன, நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன்’ என்று ரஷ்ய தடகள வீராங்கனை குற்றம் சாட்டுகிறார். தரம் குறைந்த உணவுக்காக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களை, ரஷ்ய தடகள வீராங்கனை கடுமையாக சாடியுள்ளார்.  விளையாட்டு தொடர்பான பணியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே COVID-19 வழக்குகள் அதிகரித்துள்ள போதிலும், பெய்ஜிங்கில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் 2022 ஐ நடத்தும் சீனா ஏற்கனவே … Read more