புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்தார். மூன்று ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார். தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த சனிக்கிழமை திடீரென … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கப்பல் கட்டும் தள அதிகாரி கைது

மும்பை: மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றும் 31 வயது அதிகாரி ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் மும்பையில் இருந்து செயல்படுகிறது. கடற்படைக்கான கப்பல்களை கட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு உருவாக்குபவரான பணியாற்றி வரும் கல்பேஷ் பைக்கர் என்ற 31 வயது அதிகாரியை, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மகாராஷ்டிர … Read more

மோடியா? தீதியா? – பிரச்சாரத்தை தொடங்கியது மம்தா கட்சி

வங்கத்துக்கு எதிரான கட்சி பாஜக என்ற முழக்கத்தை முன்வைத்து மோடியா? தீதியா (மம்தா) என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளது. 2019 தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக ஆழமாக காலூன்ற தொடங்கியுள்ளது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது. இது, கிழக்கு மாநிலங்களில் அக்கட்சிக்கு அதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வெற்றியாக … Read more

“திருவனந்தபுர மக்கள் என்னை நன்கு அறிவார்கள்; வெற்றி பெறுவது உறுதி” – சசி தரூர்

திருவனந்தபுரம் (கேரளா): நான் 15 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறேன். இந்த மக்களவைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை … Read more

தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக கூட்டணி உடன்பாடு: யாருக்கு எத்தனை சீட்? – ஆந்திர அரசியல்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தலுடன், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். “அமராவதியில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணி … Read more

“என்னை ஏன் அழைத்தீர்கள்?!” – கூட்டம் சேராததால் பாஜக நிர்வாகிகளிடம் சுரேஷ் கோபி ஆவேசம்

கொச்சி: திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் சுரேஷ் கோபி, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆவேசமாகப் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகன் கே.முரளிதரன், சிபிஐ … Read more

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யஸ்திராவுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், “மிஷன் திவ்யஸ்திராவுக்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இது பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனம் (எம்ஐஆர்வி) தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணையின் முதல் சோதனையாகும்” என்று … Read more

‘சம வாய்ப்பு’ – தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுரை

புதுடெல்லி: நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான எந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்யுமாறு 2100 பார்வையாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தியுள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்களை முன்னிட்டு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதற்கான விளக்கக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் இந்த விளக்கக் கூட்டத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இந்திய வருவாய் சேவை மற்றும் … Read more

அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம்: விதிமுறைகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் … Read more

பிரதமர் போட்ட பதிவு… கலாய்த்த சுப்பிரமணிய சுவாமி! – அரசியல் களத்தில் பரபரப்பு!

PM Modi: அக்னி-5 ஏவுகணையின் மிஷன் திவ்யஸ்த்ரா என்ற முதல் பறப்புச் சோதனையை முன்னிட்டு பிரதமர் மோடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.