பட்டா திருத்த சிறப்பு முகாம்| Dinamalar

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் வருவாய் துறை சார்பில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் கோவர்த்தனன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, ஊராட்சி தலைவர்கள் அவலுார்பேட்டை செல்வம், கடப்பனந்தல் பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தஸ்தகீர், வி.ஏ.ஓ., பாலசுப்ரமணி வரவேற்றனர்.முகாமில், அவலுார்பேட்டை மற்றும் கடப்பனந்தல் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றம், பெயர் மாற்றம், உட்பிரிவுகளில் திருத்தம் மற்றும் இதர தேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.