திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் <!– திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்… –>

சேலத்தில் திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி 58வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாண்டியன் என்பவருக்கும் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் உறவினரான சின்னு என்பவருக்கும் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் பாண்டியன் தன்னைத் தாக்கியதாக சின்னு கொடுத்த புகாரின் பேரில் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து காவல் நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.