டெல்லி: டிராக்டர் பேரணி: கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து விபத்தில் உயிரிழப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளியேவந்த நிலையில் தான், நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில் செல்லும்போது இந்த கார் விபத்து நடந்துள்ளது. அவர் சென்ற கார் டிரெய்லர் டிரக் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.