உக்ரைனை மீண்டும் விரைவில் கட்டமைப்போம்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சபதம்!


ரஷ்யர்கள் உக்ரைனில் தாக்கி அளிக்கும் ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் இழப்பீடு வழங்க தயாராக இருங்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் கார்க்கிவ் போன்ற பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் அரசு கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்தின் மீதும் ரஷ்யா தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யர்கள் தாக்கி அழித்துள்ள உக்ரைன் கட்டமைப்புகள் அனைத்தும் மீண்டும் புது பொலிவுடன் கட்டமைக்கப்படும் என சபதம் செய்துள்ளார்.

மேலும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் இழப்பீடுகள் என்ற வார்த்தையை விரைவில் தெரிந்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

 எங்களின் தேவாலயங்களை ஏவுகணை மூலம் அழித்து இருந்தாலும், உக்ரைன் மக்களின் நம்பிக்கையை அழிக்க முடியாது, கடவுள் மீதான நம்பிக்கையை உங்களால் அழிக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு தெருவையும், ஒவ்வொரு நகரத்தையும் மீண்டும் கட்டுவோம்.

எங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இழப்பீடுகள் மற்றும் பங்களிப்புகள் என்ற வார்த்தைகளை விரைவில் கற்றிக்கொள்வீர்கள்.

உக்ரைனியர்களுக்கு எதிராக நீங்கள் செய்த அனைத்திற்கும் முழுமையாக திருப்பிச் செலுத்துவீர்கள் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.