குதிரை பேர பயம்.. ரிசார்ட்டில் அடைத்துவைக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள்!

கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், குதிரை பேர அச்சத்தால்
கோவா காங்கிரஸ்
தனது வேட்பாளர்களை ரிசார்ட்டில் மொத்தமாக வைத்துள்ளது.

கோவாவில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே, குதிரை பேரத்தால் எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தால்
காங்கிரஸ்
தனது வேட்பாளர்களை ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வெற்றிபெற்றது. ஆனால், குதிரை பேரத்தால் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவாவில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இதனால், காங்கிரஸ் தனது வேட்பாளர்களை மொத்தமாக ஒரே ரிசார்ட்டில் அடைத்துவைத்துள்ளது. இதுகுறித்து கோவா காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுனில் கவுதங்கார், “எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்களுடன் இருப்பார்கள். வியாழன்று கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

எந்தவொரு வேட்பாளரும் ரிசார்ட்டில் இருக்க வேண்டுமென நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே விருப்பப்பட்டு ரிசார்ட்டிற்கு சென்றுள்ளனர். எங்களின் தலைவர்களை அடைத்துவைத்துள்ளதாக கூறுவது சரியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கோவாவில் தொங்கு சட்டமன்றம் உருவானால் பாஜக அல்லாத கூட்டணி ஏற்படலாம் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பாஜகவுடன் எந்தவொரு கட்சியும் கூட்டணிக்கு போகமாட்டார்கள் என காங்கிரஸ் கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.