உக்ரைனில் தீவிரமடையும் ரஷ்ய தாக்குதல்: 44 பேர் பலி| Dinamalar

கீவ்: உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்ய படைகள் 18 வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. போரை நிறுத்துவதற்கு இரு நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

latest tamil news

இந்நிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலயிவ் நகரில், விமானம் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

latest tamil news

அதேபோல் மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாக லிவிவ் மாகாண கவர்னர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.