Vijay:பேசக் கூடாததை பேசிய எஸ்.ஏ.சி.: செம கோபத்தில் விஜய்

விஜய்யின் அப்பாவும், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் யார் இந்த எஸ்.ஏ.சி. என்கிற பெயரில் தன் வாழ்க்கை பற்றி பேசி வருகிறார். அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

முதல் வீடியோவில் தி. நகர் பிளாட்பார்மில் உட்கார்ந்திருந்த எஸ்.ஏ.சி.யை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இரண்டாவது வீடியோவில் பேசக் கூடாத விஷயத்தை பேசிவிட்டார்.

அதாவது தன் மகள்
வித்யா
பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதில் தவறு இல்லை. ஆனால் விஜய்க்கு அது பிடிக்கவில்லையாம். தங்கை இறந்து பல ஆண்டுகள் ஆனாலும் விஜய்க்கு அந்த ஒரு விஷயத்தை மற்றும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில் எஸ்.ஏ.சி. வித்யா பற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதனால் எஸ்.ஏ.சி. மீது
விஜய்
கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வித்யா பற்றி எஸ்.ஏ.சி. கூறியிருப்பதாவது,

எனக்கு கடவுள் இரண்டு குழந்தைகளை கொடுத்தார். வித்யா, விஜய். வித்யா 3 வயதிலேயே படுசுட்டியா இருப்பாள். அம்மாவை ஏய், ஷோபானு கூப்பிடுவாள். விஜய்யை டேய் அண்ணானு கூப்பிடுவாள். விஜய்க்கு அவள்னா ரொம்ப அன்பு, பாசம்.

எங்களை விட கடவுளுக்கு வித்யா மீது ரொம்ப பாசம் போன்று. மூன்றரை வயதிலேயே கூப்பிட்டுக்கிட்டார். அந்த நாளை மறக்கவே மாட்டேன்.

அதே சமயம் ஒரு பிள்ளையால் உலகம் எல்லாம் எனக்கு நிறைய பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள்.

டீல், டீல்: ஒரு முடிவுக்கு வந்த தனுஷ், ஐஸ்வர்யா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.