கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு| Dinamalar

வாஷிங்டன் : கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் ‘பேரல்’ கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால் உலகளவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தினமும் கூடுதலாக 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை சந்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.

கடந்த மார்ச் 25 நிலவரப்படி அமெரிக்காவிடம் 57 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு நவ.ல் அமெரிக்கா சில நாடுகளுடன் இணைந்து ஐந்து கோடி பேரல் கச்சா எண்ணெய்யை சந்தைக்கு அனுப்ப முடிவு செய்தது. கடந்த பிப்ரவரியில் உக்ரைன் போர் துவங்கிய பின் கூடுதலாக ஆறு கோடி பேரல் கச்சா எண்ணெய் விடுவிக்கப்பட்டது. அமெரிக்கா கூடுதலாக 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க உள்ளதால் சர்வதேச சந்தையில் அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.