பொலிஸ் ஊடரடங்கு நீக்கம்

கொழும்பில் சில பகுதிகளில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் ,கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு கல்கிசை மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளிலும் மற்றும் கம்பாஹ மாவட்டத்தில் களனி பொலிஸ பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் மா அதிபரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு ,இன்று 2022.04.01 அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.