தாய் – மகன் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை.. திண்டுக்கல் அருகே பரபரப்பு..!

மர்மமான முறையில் தாய் மகன் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்,குருக்களைப்பட்டியை சேர்ந்தவர் சௌந்தராம்பாள். இவரது மகன் செல்வத்துடன் அவர்களது தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,சம்பவதன்று வேலை முடித்து விட்டு அவர்கள் தோட்டத்து வீட்டில் இரவு தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் வந்த போது மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கதினர் உடனடியாக காவல்டுறையில் புகார் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் யார் கொலை செய்தது கொலைக்கான காரணம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தல அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.