பொருளாதார நெருக்கடி :இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு : கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கயைில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக் ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக் ஷே விடம் அளித்தார்.

latest tamil news

நமது பக்கத்து நாடான இலங்கை கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பெட்ரோல் விலை உயர்வு. மின் தடை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை குழப்ப நிலை நீடித்து வந்தது. தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா பொருள் மற்றும் பண ரீதியாக பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளது. இருப்பினும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

இதனிடையே இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக் ஷே தன் பதவியை ராஜினாமா செய்தார் ராஜினாமா கடித்ததை அவர் கோத்தபய ராஜபக் ஷே விற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் அவர் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளார்.

latest tamil news

கூட்டிணி கட்சி விலகல்

இந்நிலையில் இலங்கை அரசில் அங்கம் வகித்து வந்த சுதந்தர கட்சியின் 14 எம்.பிக்கள் இலங்கை அரசில் இருந்து விலகிகொள்வதாக கடிதம் அளித்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் காபந்து அரசு அமைக்க வேண்டும் என இலங்கை அதிபருக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.