உக்ரேனிய மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசிய ரஷ்யா துருப்புகள்! வெளியான புகைப்படம்


ரஷ்ய துருப்புக்கள், உக்ரேனிய பெண் மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசியதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கீவ் அருகே உள்ள Motyzhyn நகர மேயர் Olga Sukhenko-வே குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமான AP தெரிவித்துள்ளது.

ரஷ்ய கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் கணவர் மற்றும் மகனுடன் Olga Sukhenko சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, Motyzhyn நகரம் முழுவதும் உள்ளூர் அதிகாரிகளை குறிவதை்த ரஷ்ய படைகள், தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கதாவர்களை கொலை செய்தனர்.

மேயர் Olga Sukhenko மற்றும் அவரது குடும்பத்தை சுட்டுக்கொன்ற ரஷ்ய துருப்புகள், காட்டுப்பகுதியில் உள்ள குழியில் வீசினர் என அவர் கூறினார்.

மார்ச் 23ம் திகதி குடும்பத்தினருடன் மேயர் Olga Sukhenko ரஷ்ய படைகளால் கடத்தப்பட்டார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்பட்ட செய்தி அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

வேலைக்கு செல்ல உயிரை பணயம் வைக்கும் இலங்கையர்கள்! வெளியான பரபரப்பு வீடியோ 

Motyzhyn மேயர் கொல்லப்பட்டதை உக்ரேனிய துணை பிரதமர் Iryna Vereshchuk உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் உக்ரைனில் ரஷ்ய போர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.