இந்திய -அமெரிக்க உறவு உலகின் பிரச்னைக்கு தீர்வு காணும்: மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் , இரு தரப்பு நட்புறவு, இந்தோ -பசிபிக் பிராந்திய பாதுகாப்பு பற்றி ஆலோசனை நடத்தினர்

latest tamil news

மோடி கூறியது, இந்திய அமெரிக்க உறவு, உலகின் பல பிரச்னைகளுக்கு தீ்ர்வும் காணும். உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் வலியுறுத்தினேன். உக்ரைனின் புச்சா நகரில் நடந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய -அமெரிக்க உறவு இயற்கையானது. இவ்வாறு மோடி பேசினார்.
ஜோ பைடன் பேசியது:இந்திய- அமெரிக்க உறவு மேலும் வலுவடைய வேண்டும். உக்ரைனுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிய இந்தியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு பேசினார் ஜோ பைடன்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.