பெரம்பலூர் || லாரி மீது கார் மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி..!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஐவர் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  செல்லும் போது பின்னால் வேகமாக வந்த லாரி  கார் மீது மோதியது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் காரில் பயணம் செய்த ஒரு ஆண், சிறுமி, 2 பெண்கள்  என நால்வர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.