முதல்வர் குறித்து அவதூறு : நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் மறுப்பு

Tamil Cinema Update : தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மேலும் பிரபலமானார். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தலித் சமூகத்தினர் குறித்து இவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து பலகட்ட முயற்சிக்குபின் ஜாமின் பெற்ற இவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி கைதாகும் நிலையில் உள்ளார். முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறி நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ள மீரா மிதுன், இந்த ஆடியோ வெளியான நாளில் தான் வேறொரு நிகழ்ச்சியில் இருந்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த காவல்துறை, மீரா மிதுன் காவல்துறையில் ஒவ்வொருவர் மீது உண்மைக்கு புறம்பான கருத்தக்களை தெரிவித்து வருகிறார்.

ஏற்கனவே தலித் மக்களை விமர்சித்து தடுப்பு காவலில் கைதாகியுள்ளார் என்று கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மீரா மிதுன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் அவர் வெளியிட்ட அவதூரான ஆடியோ பதிவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.