அரச வருமானத்திற்கு அமைவாக ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக 2020 ஆண்டில் இலங்கை காணப்பட்டதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் கடனுக்காக செலுத்திய வட்டித்தொகை என்ன என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு, அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு அல்லாமல், அனைத்து வரி செலுத்தும் மக்களையும் அடிப்படையாகக் கொண்டே வரி மறுசீரமைப்பு இடம்பெற்றதாக நிதி அமைச்சர் கூறினார்.
2021ஆம் ஆண்டளவில் நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 12 ஆயிரமாக இருந்தது.
750 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டு, இந்தியாவிடமிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அதற்காக 40 மில்லியன் அமரிக்க டொலரே செலவிடப்பட்டதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.