Voyager 1: வாயேஜர் அனுப்பும் விசித்திரமான சிக்னல்களால் ஏற்படும் விஞ்ஞான குழப்பங்கள்

நாசாவின் வாயேஜர் 1 சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வித்தியாசமான சமிக்ஞைகளை அனுப்புவதால் விஞ்ஞானிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், அது சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் 1, 12 ஆண்டுகளில் நமது சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேறி 2012 இல் நட்சத்திர மண்டலத்தில் நுழைந்தது.

நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் ஏவப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகளாக நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் தனது பயணத்தைத் தொடர்கிறது.

பூமியிலிருந்து 14.5 பில்லியன் மைல் தூரத்தில் (23.3 பில்லியன் கிலோமீட்டர்கள்) இருந்தபோதிலும், நட்சத்திர மண்டலத்தின் அறியப்படாத பல விஷயங்களைக் கண்டறிய முன்னோக்கித் செல்கிறது. மேலும் அறிவியல் தரவுகளை மீண்டும் அனுப்புகிறது.

ALSO READ | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்

இருப்பினும், வாயேஜர் 1 அனுப்பிய புதிய தரவானது, ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (Jet Propulsion Laboratory (JPL)) நாசா பொறியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதனன்று, நாசா ஆய்வு இன்னும் சரியாகச் செயல்படும் போது, ​​அதன் அணுகுமுறை வெளிப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (attitude articulation and control system (AACS)) விண்கலத்தின் இயக்கங்கள் மற்றும் நோக்குநிலையுடன் பொருந்தவில்லை என்று கூறியது, இது விண்வெளியில் அதன் இருப்பிடத்தைப் பற்றிய குழப்பத்தைக் கொடுப்பதாகத் தெரிகிறது.

AACS என்பது வாயேஜருக்கு இன்றியமையாதது, ஏனெனில் இது விண்கலத்தின் ஆண்டெனா பூமியை நோக்கி இருப்பதை உறுதிசெய்கிறது, இதனால் தரவுகளை நாசாவிற்கு திருப்பி அனுப்ப முடியும்.

 “வாயேஜரின் பணி, இந்த கட்டத்தில் வித்தியாசமானதாகவும், மர்மமானதாகவும் உள்ளது” என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் வாயேஜர் 1 மற்றும் 2க்கான திட்ட மேலாளர் சுசான் டோட் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!

“விண்கலம் இரண்டும் ஏறக்குறைய 45 ஆண்டுகள் பழமையானது, இது மிஷன் திட்டமிடுபவர்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகம்” என்று நாசா கூறியது. மேலும் வாயேஜர் 2 சாதாரணமாக செயல்பவதாகவும் நாசா கூறுகிறது.

வாயேஜர் 1 இன் AACS, “உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலிக்காத” தோராயமாக உருவாக்கப்பட்ட தரவை அனுப்புவதாக நாசா கூறியது.

வாயேஜரின் இருப்பிடம் காரணமாக, ஒரு வழியில் பயணிக்க 20 மணிநேரம் 33 நிமிடங்கள் ஆகும், எனவே நாசாவிற்கும் வாயேஜருக்கும் இடையே ஒரு செய்தியின் அழைப்பு மற்றும் பதில் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகும்.

இதுவரை, நாசாவின் பொறியியல் குழு, விண்கலத்தின் ஆண்டெனா சீரமைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது நாசாவிடமிருந்து கட்டளைகளைப் பெற்று செயல்படுத்துகிறது மற்றும் கணினி தரவு வேறுவிதமாக பரிந்துரைத்தாலும் கூட தரவுகளை பூமிக்கு அனுப்புகிறது.

“பிரச்சினையின் தன்மை நன்கு புரிந்துகொள்ளப்படும் வரை, விண்கலம் எவ்வளவு காலம் அறிவியல் தரவுகளை சேகரித்து அனுப்ப முடியும் என்பதை முடிவு செய்ய முடியாது. இது தரவுகள் அனுப்புவதை பாதிக்குமா என்பதையும் சரியாக சொல்ல முடியாது” என்று நாசா தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’ அதிபர் கிம்மின் உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.