இஸ்லாமிய ஆண்கள் மூன்று திருமணம் செய்யக் கூடாது : அசாம் முதல்வர்

வுகாத்தி

ந்த ஒரு இஸ்லாமிய ஆணும் மூன்று திருமணங்கள் செய்யக் கூடாது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.

பாஜக தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது.   அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்ற வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அண்மையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஒரு இஸ்லாமிய ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அவருடைய பிரச்சினையல்ல; அது இஸ்லாமியத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பிரச்சினை.  சமூகத்தில் இஸ்லாமியப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்குக் கவுரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

இது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளானது.

நேற்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், “இஸ்லாமிய ஆண்கள் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அசாம் அரசு தெளிவாக உள்ளது. உங்களுக்கிடையே தலாக் வேண்டாம்,  மாறாக  சட்டப்படி விவாகரத்து கொடுங்கள்.  பெண்களுக்கும் ஆண்களைப் போல் சொத்தில் சம பங்கு வழங்கப்பட வேண்டும். கணவரின் சொத்தில் 50 சதவிகித பங்கை மனைவிக்குக் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது அசாம் மாநிலத்தில் அடுத்த சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.