நீச்சல் குளத்திற்குள் மயக்கமடைந்து மூழ்கிய வீராங்கனையை, குளத்திற்குள் குதித்து மீட்ட பெண் பயிற்சியாளர்..!

ஹங்கேரியில், நீச்சல் போட்டியின் போது நினைவிழந்து நீருக்குள் மூழ்கிய வீராங்கனையை அவரது பெண் பயிற்சியாளர் மின்னல் வேகத்தில் நீச்சல் குளத்திற்குள் குதித்து மீட்டார்.

தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற அனிட்டா அல்வாரஸ் என்ற அந்த அமெரிக்க வீராங்கணை, போட்டி முடிந்ததும் நீச்சல் குளத்திலேயே மூழ்கத் தொடங்கியுள்ளார்.

இதனை கவனித்த அவரது பயிற்சியாளர் ஆண்டிரியா ஃபுயெண்டஸ் பாதுகாவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அவர்கள் புரியாமல் விழிக்க அந்த பெண்ணே நீச்சல் குளத்திற்குள் குதித்து மயங்கிய நிலையில் நீருக்கடியில் இருந்த அல்வாரஸை வெளியே இழுத்து கொண்டு வந்தார்.

போட்டியின் போது ஏற்பட்ட களைப்பால் அவர் மயக்கமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.