17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு முன்கூட்டி விண்ணப்பிக்கலாம், மேலும் ஒரு வருடத்தின் ஜனவரி 1ஆம் தேதி 18 வயதை அடைவதற்கான முன்தேவையான அளவுகோலுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி உள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க உரிமை இருக்கிறது. 18 வயதை அடைந்த பிறகுதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடிகிறது. இந்தநிலையில் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கோரி முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய 18 வயது நிரம்பும்வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 17 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு 18-19 வயதுக்குட்பட்ட 1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. 2021 இல்  14.5 மில்லியன் புதிய வாக்காளர்களைச் சேர்த்தது. இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.