இந்த மாதம் இதுவரையில் 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 1135 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும்
கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு பதிவாகி வருவதாகவும், பதிவாகா நோய்த் தொற்று உறுதியாளர்கள் சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கக் கூடும் எனவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதானி வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் மீண்டும் கோவிட் சிகிச்சைப் பிரிவுகளை .ஆயத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.