நாவற்பழம் மரத்தில் ஏறிய 9ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி உணவு இடைவேளையில் நாவற்பழ மரத்தில் ஏறி நாவற்பழம் பறித்த 9ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கொம்புகரோனந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மனோஜ் என்ற மாணவனும், 11ம் வகுப்பு படிக்கும் விக்னேஸ்வரன் என்ற மாணவனும் பள்ளிக்கு அருகே உள்ள நாவற்பழ மரத்தில் ஏறி உள்ளனர்.

இவர்களை பார்த்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதே மரத்தில் ஏறியதால் பாரம் தாங்காமல் இந்த இரு மாணவர்கள் இருந்த கிளை முறிந்து, மேலே சென்ற மின்கம்பியில் சாய்ந்தாக கூறப்படுகிறது.

இதில் இருவரும் மின்கம்பி மீது விழுந்த நிலையில், மின்சாரம் தாக்கி மனோஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மாணவன் விக்னேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.