இடைக்கால வரவு செலவுத் திட்டம்:முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஆராய்வு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் சார்பாக முன்னுரிமை அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.