'நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது' – பிரதமர் மோடி பாராட்டு!

“இந்தியாவின் பல்வேறு விவகாரங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது,” என, காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பெங்களூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு, ஹெலிகாப்டர் மூலமாக திண்டுக்கலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அங்கிருந்து காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு சாலை மார்க்கமாக காரில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரபல இசை அமைப்பாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவுக்கு

வந்தது ஊக்கமளிப்பதாக உள்ளது. காந்திய சிந்தனைகள் இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக காதி பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது. இன்று காதி விற்பனை கடந்த 8 ஆண்டுகளில் 300 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடியாக காதி விற்பனை அதிகரித்துள்ளது.

கதர் ஆடை சர்வதேச ஆடையாக மாறி வருகிறது. சுதேசி இயக்கத்திற்கு மையப்புள்ளியாக தமிழகம் இருந்தது. காந்தி கூறியபடி தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு பாடுபடுகிறது. கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி (தமிழில் பிரதமர் கூறினார்). காந்தியின் முக்கிய குறிக்கோள் கிராமத்தின் வளர்ச்சி தான்’ என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.

கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது கிராமம், நகரம் என்ற வேறுபாடு தற்போது இல்லை. அந்தளவிற்கு வளர்ச்சியை எட்டி உள்ளோம். 6 லட்சம் கி.மீ., ஆப்டிகல் இழையின் மூலம் கிராமங்கள் இணைக்கப்படுகிறது. கிராமப்புற வளர்ச்சி நீடிக்க இளைஞர்கள் பங்காற்ற வேண்டும். இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி கிராமங்களை நோக்கி சென்று கொண்டுள்ளது.

ரசாயனம் இல்லாத விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.வடகிழக்கு மாநிலங்களில் ரசாயனம் இல்லாத விவசாயம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை விவசாயம் நாட்டின் உரத்தேவையை குறைக்கும்.சங்க கால உணவுப்பொருடகளை மீண்டும் விளைவிக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி பயன்பாடு 24 சதவீதம் அதிகரிப்பு. நாட்டைமுன்னேற்ற பல திட்டங்கள் செய்யப்பட்டாலும், இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமானது உள்ளது. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டசசத்து மிகுந்த உணவு குறித்து விழிப்புணர்வுடன் இருந்தனர்.

சுதேசி போராட்டத்தின் மையப்புள்ளியாக தமிழகம் இருந்தது. இந்தியாவின் பல்வேறு விஷயங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. ஒற்றுமையான சுதந்திரமான இந்தியாவையே காந்தி விரும்பினார். விவேகானந்தரை வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி தமிழகம். ஆங்கிலேயருக்கு எதிராக வேலு நாச்சியார் வாள் ஏந்தியது தேசப்பற்றின் உச்சம் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி காசியில் விரைவில் நடக்கும்.

சுதேசி போராட்டத்தின் மையப்புள்ளியாக தமிழகம் இருந்தது. இந்தியாவின் பல்வேறு விஷயங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. ஒற்றுமையான சுதந்திரமான இந்தியாவையே காந்தி விரும்பினார். விவேகானந்தரை வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி தமிழகம். ஆங்கிலேயருக்கு எதிராக வேலு நாச்சியார் வாள் ஏந்தியது தேசப்பற்றின் உச்சம்தமிழ் சங்கமம் நிகழ்ச்சி காசியில் விரைவில் நடக்கும். தமிழர்களின் மொழி கலாசாரத்தை கொண்டாட தயாராக உள்ளனர். தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.இளைஞர்கள் தான் புதிய இந்தியாவின் தூண்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.