2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்காவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது வயோதிகத்தை பலர் விமர்சிப்பதாகவும், 72 வயதிலும் பிரதமர் மோடியைப் போல் தானும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.