#BREAKING : பொது மக்களுக்கு குட் நியூஸ்.. இனி ஒரே டிக்கெட் மூலம் பேருந்துகள், ரயில்களில் பயணிக்கும் புதிய வசதி.!

ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, புறநகர் ரயில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.