திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு..!!

சென்னையில் உள்ள ஒரு ஒரு தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களாக அங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் அப்பள்ளி நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று காலை திடீரென பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மற்றொரு புறம், பள்ளி வளாகத்துக்குள் நிர்வாகி வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி பிளஸ் 2 மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனால் அப்பகுதியே போராட்டக் களமாக காட்சி அளித்தது. போராட்டம் காரணமாக மூன்று காவல் உதவி ஆணையர்கள், 4 ஆய்வாளர்கள், 10-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான பள்ளி நிர்வாகி வினோத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெறும் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளுக்கு அப்பள்ளி தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.