பல்கலைக்கழக விடுதிகளில் நீண்ட காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை பெற ஏற்பாடு

பல்கலைக்கழக விடுதிகளில் இட நெருக்கடியை குறைப்பதிலும், புதிய மாணவர்களுக்கான இட வசதி தொடர்பிலும் உயர்கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

அதற்காக 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக வதிவிடத்தில் தங்கியுள்ள பல மாணவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தனது கவனத்திற்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 4 வருடங்களுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாவிட்டால், விசேட சூழ்நிலையில் மூன்று வருடங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வெளித் தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அதிகளவான மாணவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடுவது பிரச்சினையாக உள்ளது.அவர்கள் இனி பல்கலைக்கழக மாணவர்களாகக் கருதப்படுவதில்லை என்பதால், அவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலோ அல்லது விடுதி வளாகங்களிலோ தங்கியிருப்பது சட்டப்பூர்வமானது அல்ல. முதல் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அவர்களுக்கு தங்கும் விடுதிகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் இதர வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்று சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.