அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு புதினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் கிடையாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜேர்மன் சேன்செலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற மாட்டார்கள் என ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது.
வாழ்த்துச் செய்தி
இந்த வார இறுதியில் உலகம் புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நிலையில், துருக்கி, சிரியா, வெனிசுலா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்யாவின் நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார்.
ஆனால் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீது முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகளைக் குவித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்களுக்கு புடின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மாட்டார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
மேலும், அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நட்புறவிற்கு விரோதமான நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்” என அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போர்
பிப்ரவரி 24 அன்று மேற்கத்திய சார்பு உக்ரைனுக்கு எதிராக படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியதன் மூலம் புடின் போரை தொடங்கினார். இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியாது.
இதையடுத்து, மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப மறுத்தாலும், ரஷ்யாவை எதிர்த்து போராட, இணையான ஆயுதங்களை, பயிற்சிகளை, போர் உபகரணங்களை வழங்கி தொடர்ந்து உதவி வருகின்றனர்.