குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி.க்களில் ஒருவரான இளையராஜாவின் வருகை பதிவு பூஜ்ஜியம்

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி.க்களில் ஒருவரான இளையராஜாவின் வருகை பதிவு பூஜ்ஜியமாக கருதப்பட்டுள்ளது. டிசம்பர் 2022-ல் 13 நாட்கள் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  13 நாட்கள் வரை நடைபெற்ற கூட்டத்தொடரில்  மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா  குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட கலந்துகொள்ளவில்லை அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.