முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி| The case against the Chief Minister was dismissed

புதுடில்லி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ௨௦௧௮ல் ராஜஸ்தானின் ஆல்வாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

அவருடைய பேச்சு தன் மத நம்பிக்கையை புண்படுத்தியுள்ளதாக, உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த நாவல் கிஷோர் சர்மா என்பவர், மாவ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; அது நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து நாவல் கிஷோர் சர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுபோன்ற வழக்குகள், விளம்பரத்துக்காக தொடரப்படுவதாக கண்டித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.