அவுரங்காபாத் : மஹாராஷ்டிராவில் தன்னைப் பார்த்து குரைத்த நாயை கொன்றவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள நாராலிபாக் குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்கு இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சென்றனர். அவர்களைப் பார்த்து அந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணின் வளர்ப்பு நாய் குரைத்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஒரு நபர் மண் வெட்டியால் நாயின் தலையில் அடித்ததில் அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைத் தட்டிக்கேட்ட நாயின் உரிமையாளரான அந்த பெண்ணிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாயை கொன்றதற்காகவும் அதன் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதற்காகவும் நால்வர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement