மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது, வேலை உருவாக்கம் மற்றும் உள்நாட்டு தேவையின் வளர்ச்சியை அதிகரிப்பது போன்ற மையப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இந்த பட்ஜெட் இருந்திருக்க வேண்டும்.
இந்த தேவையை பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. செலவினங்களை குறைத்து வரிகளை அதிகரித்துள்ள இந்த பட்ஜெட், பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.