இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்: ஆராய இந்திய தூதுக்குழு

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

தங்க நகை ஆபரண சம்மேளனத்தின் தலைவர் சுலானி தலைமையிலான தூதுக்குழுவினரே எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து; ஆராயுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்கள், மின் உபரகணங்கள், மோட்டார் வாகனம், மற்றும் உணவு பதப்படுத்தல் உட்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளக் கூடிய முதலீடுகள் குறித்து இந்திய தூதுக் குழுவினர் ஆராயவுள்ளனர்.

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.