சிக்ஸர்களை பறக்கவிட்ட பூரன்! இறுதிவரை போராடிய கேப்டன்.. டி20 தொடரை கைப்பற்றிய மே.தீவுகள்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.

அதிரடி துடுப்பாட்டம்

ஜோன்ஸ்பர்க்கில் நடந்த கடைசி டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

பிரண்டன் கிங் அதிரடியாக 36 ஓட்டங்களும், மேயர்ஸ் 17 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

பூரன்/Pooran @windiescricket (Twitter)

சார்லஸ் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை காட்டினார்.

மொத்தம் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் வந்த ரெய்பர் 27 (18) ஓட்டங்களில் அவுட் ஆனார்.

ஷெப்பர்ட் விஸ்வரூபம்

கடைசி கட்டத்தில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெப்பர்ட், 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 220 ஓட்டங்கள் குவித்தது. இங்கிடி, ரபடா மற்றும் நோர்ட்ஜெ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 44 பந்துகளில் 83 ஓட்டங்கள் விளாசினார். ரோஸோவ் 21 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

நிலைகுலைய வைத்த ஜோசப்

தென் ஆப்பிரிக்கா அதிரடியாக 200 ஓட்டங்களை கடந்த நிலையில், அல்சரி ஜோசப்பின் மிரட்டலான பந்துவீச்சால் 7 ஓட்டங்களில் வெற்றியை இழந்தது.

அந்த அணி 20 ஓவரில் 213 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி வரை வெற்றிக்காக போராடிய கேப்டன் மார்க்ரம் 18 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.

அபாரமாக பந்துவீசிய அல்சரி ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஜோசப் வென்றார்.

ஒருநாள் தொடர் சமனில் முடிந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.