குடும்ப அரசியலால் நாட்டைக் கொள்ளையடித்த அனைத்து ஊழல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன – பிரதமர் மோடி பேச்சு

குடும்ப அரசியலால் நாட்டைக் கொள்ளையடித்த அனைத்து ஊழல் கட்சிகளும் காங்கிரசின் தலைமையின் கீழ் ஓரணியில் திரண்டிருப்பதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

டெல்லியில், விரிவாக்கம் செய்யப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய மோடி, ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட மதிக்காத எதிர்க்கட்சிகளின் போக்கைக் கண்டித்தார்.

வெறும் 2 மக்களவை உறுப்பினர்களுடன் இருந்த பாஜக, கடுமையான உழைப்பால் இன்று முந்நூறுக்கும் மேற்பட்ட எம்பிக்களுடன் இந்தியாவின் பலம் வாய்ந்த ஒரே கட்சியாகத் திகழ்வதாக மோடி சுட்டிக் காட்டினார்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பாஜக தனது செல்வாக்கை அதிகரித்து வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.