வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு: மேலும் 6 மயில்கள் உயிரிழப்பு..!

கரூர் மாவட்டத்தில் பீர்க்கங்காய் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை மேய்ந்த மேலும் 6 மயில்கள் இறந்தன.

குளித்தலை அருகிலுள்ள பிள்ளபாளையத்தில் பூச்சிமருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை தேடிய 8 மயில்கள் நேற்று இறந்தது தொடர்பாக விவசாயி முருகானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றும் 6 மயில்கள் அதே தோட்டத்தில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் மயில்களை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியதோடு, தோட்டத்தில் சிதறிக்கிடந்த விஷம் கலந்த நெல்மணிகளை 100 நாள் பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினர்.

மயில்கள் இறந்த முதல் நாளிலேயே தோட்டத்திலுள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.