விளையாட்டுத்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை,

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதில் ,

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம் உள்ளிட்டவை ரூ.25 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில்ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 10 கோடி செலவில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நவீன எல்இடி மின்விளக்கு வசதிகள் ஒன்பது கோடியே 90 லட்சம் செலவில் புனரமைக்கப்படும். உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பை அவர் வெளியிட்டார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.