சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவன்.. 'எதிர்நீச்சல்' மாரிமுத்து திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்.!

எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமான மாரிமுத்துவின் திடீர் மறைவை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு சின்ன கேப்பில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த மாரிமுத்துவின் மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக மாரிமுத்துவை சொல்லலாம். இந்த தொடரில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்து இருந்தார். இவருக்காகவே இந்த சீரியலை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தான் இன்று காலை 8.30 மணி அளவில் எதிர்நீச்சல் சீரியலுக்காக ஸ்டுடியோவில் டப்பிங் பேசி கொண்டிருந்த போது மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு அங்கிருந்து மருத்துவமனை கொண்ட சென்ற நிலையில், வரும் வழியிலே மாரிமுத்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியல்: ஜனனியுடன் சேர்ந்து ஆப்பு வைத்த அப்பத்தா: குணசேகரன் இதை எதிர்பார்க்கலயே.!

58 வயதான மாரிமுத்துவின் திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை உலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாரிமுத்துவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல்: ஜீவானந்தம் – ஈஸ்வரி காதல் பற்றி தெரிய வந்த உண்மை: குணசேகரன் எடுக்க போகும் முடிவு என்ன.?

அதில், தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கி விட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன். என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்ப்ரக்ளுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்.

இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார் வைரமுத்து. அதே போல் நடிகர் சாந்தனு அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துள்ளார். அதே போல் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் சசிக்குமார், பாண்டியராஜ், சேரன் உள்ளிட்டோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.