தென் மாவட்ட வேலைவாய்ப்பு… கூடவே பெரிய சர்ப்ரைஸ்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடுத்த மெகா அப்டேட்!

சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்காவில் TIDCO-வின் மேம்பட்ட உற்பத்தி மையத்தை (CoEs) தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில தொழில் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, 2024 ஜனவரியில் தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்

புதிய முதலீடுகள்

இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை பங்கேற்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டின் மூலம் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்படுவது மட்டுமின்றி உயர் தர வேலைவாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக அதிகப்படியான காப்புரிமையை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்று கூறினார். ஏற்கனவே தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தென் மாவட்ட தொழில் முன்னேற்றம்

இந்த சூழலில் புதிய தொழில் நிறுவனங்களின் வருகை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நடைபோட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொழில் வாய்ப்புகள் தென் மாவட்டங்களில் குவிந்தால் பெரிய அளவில் முன்னேற்றத்தை பார்க்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதற்கும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்துள்ளார். அதாவது, தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் அதற்கான சூழல் என்பது சென்னை, கோவை ஆகியவற்றை சுற்றியே அமைந்துள்ளது.

MSME துறைக்கு கவனம்

இனி வருங்காலங்களில் தென் மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்கள் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நவீன முறையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வறண்ட பூமி என்ற பார்வை தென் மாவட்டங்களின் மீது நிலவி வரும் சூழலில் புதிய தொழில் வாய்ப்புகள் ஒட்டுமொத்த பிம்பத்தை மாற்றி விடும்.

தமிழக அரசு அறிமுகம்

தற்போதைய சூழலில் தமிழகம் மற்ற நாடுகளுடன் போட்டி போடும் நிலைக்கு வளர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். TANCEM, TANSAM, TAMCOE ஆகிய மூன்று Centre of Excellence அமைப்புகளை 506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் அனைத்து துறைகளிலும் வல்லுநர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் மென்பொருள் ஆகியவை கொண்டு வரப்படும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவுகளின் வருகையால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு விதங்களில் மேம்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் உற்பத்தி Design, Simulation, Prototyping ஆகியவற்றை குறிப்பிடலாம். Centre of Excellence மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும். தொழில்துறையை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.