ஸ்மார்ட் சிட்டியாக மாறும் திருப்பதி… இவ்வளவு நன்மைகளா…வேற லெவல்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் திருப்பதி நகரின் உள்கட்டமைப்பு வசதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஸ்மார்ட் சிட்டிநாட்டின் பல்வேறு நகரங்களை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் புனே, ஆக்ரா, இந்தூர், அமராவதுதி உள்ளிட்ட பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.தமிழகம் – ஸ்மார்ட் சிட்டிதமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 7 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது திருப்பதி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றம் செய்யப்படுகிறது. திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன், NEC கார்ப்பரேஷன் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொள்கிறது.​ அடேங்கப்பா.. ஒரு நாணயத்தின் விலை ரூ.191 கோடி: அத்தனையும் வைரம், தங்கம்.. எலிசபெத் ராணி நினைவு நாளில் வெளியீடு!​
திருப்பதிகோவில் நகரமான திருப்பதி நாட்டிலேயே புகழ்பெற்ற புனித யாத்திரை தலமாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
​ மாரிமுத்து… நானும் அவரும் அந்தக்காலத்துல… சீமான் சொன்ன உருக்கமான சம்பவம்!​ஸ்மார்ட் சிட்டியாகும் திருப்பதி

அதிக மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒரு நகர செயல்பாட்டு மையத்தை (COC) நிறுவி, திருப்பதியில் பல்வேறு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) தீர்வுகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த திட்டத்தின் முதன்மை இலக்கு, நகர நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மேம்பட்ட சேவைகளை வழங்குவது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ICT தீர்வுகள் ஒரு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை உள்ளடக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​ இந்தோனேசியாவின் கோல்டன் விசாவை பெறும் முதல் நபர் யார் தெரியுமா? இதெல்லாம் வரலாறு!​சிக்கல்களுக்கு தீர்வு
மேலும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ICT தீர்வுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தகவல் மையங்கள் உள்ளிட்ட கூடுதல் உள்கட்டமைப்பு அமைப்புகள் நகர செயல்பாடுகளுக்கு தேவையான தகவல்களை அளித்து எந்த ஒரு முடிவையும் எளிதாக எடுக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பதி வரும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படும் என்று திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் டி ஹரிதா தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் போக்குவரத்து மேலாண்மைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​ ‘இளவரசருக்கு டெங்கு… ராஜாவுக்கு எய்ட்ஸ்’ திமுகவை மீண்டும் விளாசிய கஸ்தூரி!​போக்குவரத்துபோக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பீக் ஹவர்ஸில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விபத்துகளைக் குறைப்பதற்காகவும் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​ பிரதமர் மோடியை அணைத்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்… ஜி 20 மாநாடு க்ளிக்ஸ்!​வேற லெவல்
இந்த திட்டம் ஸ்மார்ட் வாட்டர் சொல்யூஷன்ஸ், சுற்றுச்சூழல் சென்சார்கள் மற்றும் பொது முகவரி அமைப்புகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றும் இதனால் பார்வையாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்மார்ட் திட்டமும் செயல்படுத்தப்படுவதால் திருப்பதி வேற லெவலில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.