பேபி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'பேபி'. இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்திதாலும் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இப்படம் தெலுங்கு மொழியில் மட்டும் தான் வெளியானது வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழில் ரீமேக் செய்ய உரிமையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.